Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசே தேவையான நடவடிக்கை எடுத்து வருவதால் அனைத்து கட்சி கூட்டம் அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும். நன்மை தரும். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசே தேவையான நடவடிக்கை எடுத்து வருவதால் அனைத்து கட்சி கூட்டம் அவசியம் இல்லை.
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறைவு என செல்லா முடியாது. பின்னர் ஒதுக்குவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.